கனமழை காரணமாக நாளை (டிசம்பர் 02) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு - TNTeachersTrends

Latest

Monday, December 1, 2025

கனமழை காரணமாக நாளை (டிசம்பர் 02) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு



கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மட்டும், நாளை (டிசம்பர் 02) நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

¶ சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை (டிசம்பர் 02) நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.



டிட்வா புயல் காரணமாக, தேர்வுகள் ஒத்திவைப்பு

டிட்வா புயல் காரணமாக, நவம்பர் 29 இன்று நடைபெற இருந்த பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைப்பு

தித்வா புயல் முன்னெச்சரிக்கையாக திருச்சி பாரதிதாசன்| பல்கலை., மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை (நவ.29) நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

டிட்வா புயல் எதிரொலியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சார்பில் நாளை (நவ.29) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக நவம்பர் 29 அன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவிப்பு

டிட்வா புயல் காரணமாக புதுவை மத்திய பல்கலைக்கழகத்திற்கு நாளை (நவ.29) விடுமுறை; மேலும், புதுவை பல்கலைகழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது



TRUST EXAM 06.12.2025க்கு ஒத்திவைப்பு!!



அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6

தமிழ்நாடு ஊரசுத் திறனாய்வுத் தேர்வு நவம்பரி 2025

கன மழையின் காரணமாக தேர்வினைத் தள்ளி வைத்தல்

TAMIL NADU RURAL STUDENTS TALENT SEARCH EXAMINATION (TRUSTS)

செய்திக் குறிப்பு

வங்கக்கடலில் நிலவும் தித்வா புயல் காரணமாக 29.11.2025 அன்று நடைபெறுவதாக இருந்த 'தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு" மாணவர்களின் நலன் கருதி 06.12.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

இயக்குநர்

நாள்: 28.11.2025

இடம்: சென்னை -6.

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TNRTSE) பற்றிய விவரங்கள்:

தேர்வு விவரங்கள்

நோக்கம்: ஊரகப் பகுதிகளில் வசிக்கும் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் உயர்கல்விக்கு நிதியுதவி வழங்குவதே இத்தேர்வின் முதன்மை நோக்கம்.

நிதியுதவி: இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலிருந்தும் தலா 50 சிறுவர்கள் மற்றும் 50 சிறுமிகள் என மொத்தம் 100 மாணவர்கள் (மாநிலம் முழுவதும் சுமார் 4,130 மாணவர்கள்) தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, ஆண்டுக்கு ரூ. 1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

தகுதி வரம்புகள்

வகுப்பு: அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

இருப்பிடம்: விண்ணப்பதாரர்கள் ஊரகப் பகுதிகளில் (கிராமப்புறம்) அமைந்துள்ள பள்ளிகளில் மட்டுமே படித்திருக்க வேண்டும். நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

மதிப்பெண்: 8 ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வருமானம்: பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1,00,000/- (ஒரு லட்சம் ரூபாய்க்கு) மிகாமல் இருக்க வேண்டும்.



விண்ணப்பம் மற்றும் தேர்வு நடைமுறை

விண்ணப்பம்: விண்ணப்பப் படிவங்களை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்தோ அல்லது அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்திலிருந்தோ பெறலாம்.

தேர்வு:

இது ஒரு புறநிலை (objective type) வகைத் தேர்வாகும்.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அல்லது நவம்பர்/டிசம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்படும்.

2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு நவம்பர் 29, 2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மைய விவரங்கள் மற்றும் வழிமுறைகள் அரசுத் தேர்வுகள் இயக்ககம், தமிழ்நாடு மூலம் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment