தி.மு.க.,வின் 311வது தேர்தல் வாக்குறுதி என்னாச்சு! - கோரிக்கை அட்டையுடன் பணியாற்றிய ஆசிரியர்கள் - TNTeachersTrends

Latest

Tuesday, December 2, 2025

தி.மு.க.,வின் 311வது தேர்தல் வாக்குறுதி என்னாச்சு! - கோரிக்கை அட்டையுடன் பணியாற்றிய ஆசிரியர்கள்

தி.மு.க.,வின் 311வது தேர்தல் வாக்குறுதி என்னாச்சு! - கோரிக்கை அட்டையுடன் பணியாற்றிய ஆசிரியர்கள் - What is DMK's 311th election promise? - Teachers who worked with demand cards

பொள்ளாச்சி அருகே, குறுஞ்சேரி அரசுப்பள்ளியில் ஆசிரியர் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினார்



தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற் றக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி யாற்றினர்.

தமிழகத்தில், கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதிக்கு முன் நியமிக்கப் பட்ட இடைநிலை ஆசிரி யர்களுக்கு, 8,370 ரூபாய் என்ற அடிப்படை ஊதிய மும், 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் நியமிக்கப் பட்டவர்களுக்கு, 3,200 ரூபாய் என்ற அடிப்படை ஊதியமும் வழங்கப்ப டுகிறது.

ஒரே வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு வேறு, வேறு அடிப்படை ஊதி யங்களை அரசு வழங்கு வது பெரும் பிரச்னைக்கு உள்ளானது. இதை கண் டித்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி னர்.

அதன் விளைவாக தி .மு.க. 311வது தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்தவுடன் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப் படும் என்று அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவ டையும் நேரத்திலும் இன் னும் கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை.

இந்நிலையில், விரக்திய டைந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்

மூன்று கட்டப் போராட் டத்தை அறிவித்துள்ளது. பொள்ளாச்சி தெற்கு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தில் வட்டாரச் செயலாளர் அருண்குமார் கூறியதாவது:

ஒரு பணிக்கு இரண்டு அடிப்படை ஊதியங்கள் இருக்க கூடாது. அது அர சியல் சட்டத்துக்கு புறம்பா னது. அதேபோல தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதி யாக நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப் படும் என்று தெரிவித் தது. ஆனால் இன்றுவரை அதைச் செய்யவில்லை.

எனவே, மூன்று கட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். பொதுவாக ஆசிரியர் கள் மீது அதிக சம்பளம் கேட்டுப் போராடுவர் என்ற விமர்சனம் உண்டு. ஆனால் இங்கே சம மனதி யம் தாருங்கள் என்று தான் நாங்கள் போராடி வரு கிறோம். உயரிய உயர்வு வேண்டாம். உரிய ஊதி யமே போதும் என்பதே எங்களது கோரிக்கை.

எனவே, இன்று (நேற்று) முதல் கோரிக் கையை அட்டை அணிந்து பணிபுரிவது எனவும், கம் தேதி கோட்டை நோக் கிய பேரணி நடத்துதல் என்றும் முடிவு செய் துள்ளோம். அதன் பின் பும் கோரிக்கை ஏற்கப் படவில்லை என்றால், 24ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை என முன் னெடுக்க உள்ளோம்.

இவ்வாறு, கூறினார்.

No comments:

Post a Comment