தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற முடிவு - அமைச்சர் கோவி. செழியன் Private Universities. Decision to withdraw the amendment bill - Minister Kovi. Chezhiyan
தமிழக சட்டப் பேரவையில் கடந்த அக். 15-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு தனியார் பல்கலைக்க ழகங்கள் சட்டத் திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டு மறு ஆய்வு செய்யப்படும் என உயர் கல்விக் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிடத்து ஐக்கை தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதா குறித்து சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் இதுசார்ந்து சில விவரங்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகி றேன்.
தற்போது தமிழகத்தில் உயர் கல் வியில் சேரும் மாணவர்களின் சத வீதம் இந்தியாவிலேயே அதிகபட்ச மாக உள்ள நிலையில், மேலும் அதி கமான எண்ணிக்கையில் உயர் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங் கப்படுவதற்கான தேவை உள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.
இந்தச் சூழ்நிலையில் தற்போது இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவ னங்கள், மாநில தனியார் பல்கலைக் கழகங்களாக உயர விழையும்போ தும், புதிதாக தனியார் பல்கலைக்கழ கங்கள் தொடங்குவதற்கும் தற்போ துள்ள சில வழிமுறைகளை எளி மைப்படுத்த வேண்டும் என்ற நோக் கத்துக்காக இந்தச் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது.
பாதிக்கப்படாத வகையில்...: அதேசமயம் இச்சட்டத் திருத்த மசோதாவில், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாகும் போது அதனால் மாணவர்கள் நலனோ, பணியாற்றும் ஆசிரியர் கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நலனோ எந்த வகை யிலும் பாதிக்கப்படாத வகையில் உரிய சட்டபாதுகாப்புகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன.
உயர் கல்வியைப் பொருத்தவரை இந்தியாவிலேயே முதன்மை மாநி லமாகத் திகழ்ந்துவரும் தமிழகத் தில், தற்போதுள்ள தமிழ்நாடு தனி யார் பல்கலைக்கழகங்கள் சட்டம் 2019.பிரிவு 4-இன்படி, தனியார் பல் கலைக்கழகங்களை நிறுவுவதற்கு குறைந்தபட்ச நில அளவு 100 ஏக்க தொடர்ச்சியான டர்ச்சியான நிலம் தேவைப்ப டுகிறது. ஆனால், மாநகராட்சி, நக ராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதி களில் அத்தகைய மிகப்பெரிய அள விலான தொடர்ச்சியான நிலத்தை அடையாளம் காண்பது மிகவும் கடி னமாக உள்ளது. எனவே, வேகமாக நகரமயமாகிவ ரும் தமிழகத்தில் நிலங்களின் மதிப் பும் உயர்ந்து வருவதால் புதிய பல்க லைக்கழகங்களைத் தொடங்குவதற் கும், பெரிய கல்லூரிகள் பல்கலைக் கழகங்களாக தங்களை மாற்றிக் கொள்ள, தரம் உயர்த்திக்கொள்ள விழையும்போதும் மேற்படி குறைந் தபட்ச நில அளவின் தேவை ஒரு சவாலாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் பிற அண்டை மாநிலங்களின் தனியார் பல்கலைக்கழகங்களின் சட்டங்க ளுக்கு இணங்க, நிலத்தின் அளவு குறைக்கப்பட்டால், பல்கலைக்க ழகங்களாக மாற விரும்பும் தனி யார் கல்வி நிறுவனங்கள் அதற் கான முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும் என்ற கருத்து கள் பெறப்பட்டன.
நிலங்கள் தொடர்பான விதி களை...: இதன்மூலம், புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் அமைவதையும், விதிமுறைகளின் படி தகுதியுள்ள தனியார் கல்லூரி கள் மாநில தனியார் பல்கலைக்கழ கங்களாக மாற்றம் பெறுவதையும் ஊக்குவிக்க முடியும். எனவே, மாண வர் சமூகத்தின் நலனுக்காகவும், மாநி லத்தில் உயர் கல்வியை மேலும் மேம் படுத்தவும், தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற் குத் தேவையான நிலங்கள் தொடர் பான விதிமுறைகளை எளிமைப்ப டுத்த இந்த சட்டமசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்ட மசோதாவின் படி குறைந்தபட்ச நில அளவு மாநக ராட்சிக்கு 25 ஏக்கர், நகராட்சி அல் லது பேரூராட்சிக்கு 35 ஏக்கர், பிற பகுதிகளுக்கு 50 ஏக்கர் என வரை யறுக்கப்பட்டுள்ளது. சமூக நீதியி லும் உயர்கல்வி மேம்பாட்டிலும் ஆழ்ந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்ட இந்த அரசு, எந்த நிலையி லும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது.
ஆசிரியர் நியமனம் மற்றும் மாண வர் சேர்க்கையில் இட ஒதுக்கீட் டைப் பின்பற்றுவது, கல்விக் கட்ட ணத்தை அரசே நிர்ணயிப்பது, பணியாளர் நலனைப் பாதுகாப்பது போன்ற அம்சங்களை உத்தரவா தப்படுத்தியும், தமிழகத்தின் பாரம் பரியக் கல்லூரிகள் அடுத்த உயர்நி லையை எட்டுவதை மனதில் கொண் டும் இந்த சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.
கருத்துகள் பெறப்பட்டு... அதே நேரத்தில் மாநில இடஒதுக்கீட்டு உரிமையைக் கருத்தில்கொள்ளாத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்க ளுக்கு இதுவரை நமது அரசு அனு மதி அளிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விழைகிறேன். இருப் பினும், இப்பொருள் குறித்து சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத்துகளின் அடிப்ப டையிலும், சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் தெரிவிக்கப் பட்டுள்ள கருத்துகளின் அடிப்ப டையிலும் இந்தச் சட்ட மசோதா குறித்து கல்வியாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், கல்வித் துறை அலுவலர்கள் ஆகியோரின் கருத்து களைப் பெற்று, அதன் அடிப்படை யில் உரிய மேல் நடவடிக்கையைத் தொடரலாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அவரது அறிவுரையின்படி இந் தச் சட்ட மசோதா திரும்பப் பெறப் பட்டு உரிய மறு ஆய்வு செய்யப்ப டும் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன் என அதில் தெரிவித்துள் ளார்.
No comments:
Post a Comment