Humanities Classrooms 'H' Project - Aisha R. Natarajan
மனிதநேய வகுப்பறைகள் ஆயிஷா இரா. நடராசன்
மாணவர்களின் பொருளாதார பின்னணி, அவர்களுடைய பெற்றோரின் சமூக அந்தஸ்து என்பதை எல்லாம் கடந்து முதலில் நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை நினைவுப்படுத்துவதாக வகுப்பறை இருக்க வேண்டும்.
தென்னாப்பிரிக்காவில், அனைவருக்குமான பள்ளிகள் தொடங்கப்பட்டு கறுப்பினக் னக் குழந்தைகளுக்கு குழந்தைகளுக்கு அரசு விலையில்லா கல்வி வழங்கியபோதும், அவற்றில் இணைய கறுப்பின மக்கள் மறுத்தனர். பள்ளி செல்லாதவர்களிடம் அதற்கான காரணத்தை அன்றைய அதிபர் நெல்சன் மண்டேலா வினவினார். அரசியல் விடுதலை கிடைத்தாலும் தாங்கள் அடிமைகள் என நினைவூட்டும்படியாக அந்த வகுப்பறைகள் இருப்பதாக கறுப்பின குழந்தைகளிடமிருந்தும் பெற்றோரிடமிருந்தும் பதில் வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்குத் தீர்வு காணவே 'வால்டார்ஃப்' கல்வி முறையை நெல்சன் மண்டேலா அறிமுகம் செய்தார்.
குழந்தை சொல்லும் பாடம்
இதை விவாதப் பொருளாகக் கொண்டு வெளிவந்திருக்கும் நூல், ஜாக் பெட்ராஷ் எழுதிய வால்டார்ஃப் கல்வி முறையைப் புரிந்துகொள்ளுதல்' (Understanding Waldorf Education). ( வெளியிலிருந்து உள்நோக்கி பொதுக்கல்வித் திட்டம் இயக்குகிறது. அவர்கள் என்னவாக உருவாக வேண்டும் என்பதைத் திணிப்பதற்காகவே கல்வி செயல்படுகிறது என நூலாசிரியர் குற்றம்சாட்டுகிறார். இதற்கு மாற்றாக, குழந்தையின் மனத்திலிருந்து வெளி உலகை நோக்கி செயல்படும் கல்வியே நமக்குத் தேவை. தான் என்ன ஆக வேண்டும் என்பதைக் குழந்தையே சுயமாக முடிவு செய்யும்படியாகக் கல்வி இருக்க வேண்டும் என்கிற அற்புத கருத்தை முன்மொழிகிறார். இந்த அடிப்படையில்தான் வால்டார்ஃப் கல்வி முறை செயல்படுகிறது.
ஆஸ்திரிய கல்வித் தத்துவ அறிஞர் ருடால்ஃப் ஸ்டெய்னர் 1919இல் உருவாக்கிய கல்விமுறை இது. அவர் பெயரில் இல்லாமல் வால்டார்ஃப் என அழைக்கப்படுவது ஏன்? ஜெர்மனியில் வால்டார்ஃப் எனும் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவசமாகத் தொடங்கப்பட்டதால் இந்தப் பெயர் பெற்றது. குழந்தையின் முழுமையான வளர்ச்சி, அறிவோடு மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. உடல், சமூகம் நோக்கிய மனம், சமூகம் நோக்கிய பார்வை ஆகியஅனைத்தையும் உள்ளடக்கியதே வளர்ச்சி என்றார் ருடால்ஃப் ஸ்டெய்னர். இந்தக் கல்விமுறையில் தேர்வு கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் இங்கே குழந்தைகளுக்கு இடையில் பாகுபாடு இல்லை."
'H' திட்டம்
ஆங்கில எழுத்து H அடிப்படையில் தலை (Head), இதயம் (Heart), கை (Hand) ஆகிய மூன்றும் இணைவு பெறுகின்ற முழுமையான பாடத்திட்டம் இவர்களுடையது. நடைமுறைத் திறன்களை வளர்க்கக்கூடிய இந்தக் கல்விமுறையில் பாடப்புத்தகங்கள் இரண் இரண்டாம்பட்சம்.
மனித வளர்ச்சியின் தனித்துவமான கட்டங்களை அடிப்படையாகக் கொண்டு மூன்றே வகுப்புகள்தான் உள்ளன. குழந்தைப்பருவம், நடுத்தரக் குழந்தைப்பருவம், இளமைப் பருவம் ஆகியவற்றுக்கான மூன்று வகுப்பறைகள்தான். "எல்லாரும் சேர்ந்து அல்ஜீப்ராவை படித்துவிட்டு உடனடியாக காலாண்டு தேர்வுக்குத் தயாராகுங்கள்" என்று இந்தக் கல்வி முறை கட்டளை இடுவதில்லை. மாறாக ஒருவர் ஆறு மாதத்தில் முடிக்கின்ற அல்ஜீப்ராவை, மற்றொருவர் பயில எட்டு மாதம்வரைகூட எடுத்துக்கொள்ளலாம் என்று அவரவர் வேகத்துக்கு ஏற்ப கற்பிக்கப்படுகிறது.
கல்வி மட்டுமின்றி, வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் தானே உருவாக்கிக் கொள் கின்ற அற்புதத்தை இந்தக் கல்வி முறை முன்மொழிகிறது.
குவாண்டம் உலகை அறிந்துகொள்வது குழந்தை மொழியைப் புரிந்துகொள்வதைப் போன்றது ஒ ரு பந்தைச் சுவரின் மீது எறிந்தால், அந்தப் பந்து மீண்டும் உங்கள் பக்கமே திரும்பிவரும் தானே? ஒரு குவாண்டம் துகளைச் சுவரின் மீது எறிந்தால், அது சுவரில் பட்டுத் திரும்ப வரலாம். இல்லையென்றால், சுவரை ஊடுருவி மறுபக்கம் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. இந்தப் பண்புக்கு குவாண்டம் ஊடுருவல் (quantum tunneling) என்று பெயர். இப்படியாக, குவாண்டம் துகள்களின் பண்புகள் விந்தையானவை.
எலெக்ட்ரான்கள், போட்டான்கள் போன்ற பொருட்கள் குவாண்டம் துகள்கள். 'ஒன்றிரண்டு' எலெக்ட்ரான்கள், போட்டான்களில் மட்டுமே குவாண்டம் விளைவுகள் நடைபெறும் என்று அறிவியலாளர்கள் முன்பு நினைத்திருந்தார்கள்.
ஆனால், லட்சக்கணக்கான குவாண்டம் துகள்களைக் கொண்ட பேரளவிலான (macroscopic) நிலையிலும், குவாண்டம் விளைவுகள் சாத்தியம் என்பதை இந்த ஆண்டின் நோபல் விருதாளர்களான ஜான் கிளார்க் (John Clarke), மிஷேல் டெவோரே (Michel Devoret), ஜான் எம். மார்ட்டினிஸ் (John M. Martinis) ஆகிய மூவரும் நிரூபித்திருக்கிறார்கள், மின்சுற்றில் (electrical circuits) நிகழும் பெருமளவிலான குவாண்டம் ஊடுருவல் (macroscopic quantum mechanical tunnelling). ஆற்றல் அளவாக்கம் (energy quantisation) கண்டறிந்து விளக்கியதற்காக இவர்களுக்கு இந்த ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மரத்திலான பொருட்கள் மின்சாரத்தைக் கடத்தாது; அலுமினியம், இரும்பு போன்ற உலோகங்கள் மின்சாரத்தைக் கடத்தும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்த உலோகங்களிலும்கூட நுண்ணிய அளவில் மின்தடை (electrical resistance) இருக்கும். ஆனால், மீக்கடத்தி (super conductor) என்று சொல்லப்படும் பொருட்களில் மின்தடை இருக்காது. மின்சாரம் தங்குதடையின்றிப் பாயும்.
'கூப்பர் ஜோடிகள்'
சாதாரணக் கடத்திகளில் எலெக்ட்ரான்கள் தனித்தனியாக இயங்கும். ஆனால், மீக்கடத்தி களில் ஒரு எலெக்ட்ரான் இன்னொரு எலெக்ட்ரான் ஜோடியுடன் இயங்கும். இதற்கு 'கூப்பர் ஜோடி' (Cooper pairs) என்று பெயர். பள்ளி மாணவர்கள் சுற்றுலா செல்லும்போது, இரண்டு இரண்டு பேராக அணிவகுத்துச் செல்வார்கள். அப்போது, அந்த அணியை உடைக்க எந்த வண்டியும் நடுவே செல்லாது அல்லவா? அதுபோல அணிவகுத்து நிற்கும் 'கூப்பர் ஜோடிகள்' மின்சாரத்தைக் கடத்தும்போது எந்த மின்தடையும் இருக்காது. மீக்கடத்திகளின் எலெக்ட்ரான் பண்புகளை விளக்கியதற்காக 1972ஆம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு அளிக்கப்பட்டத ுபிரையன் ஜோசப்சன் என்னும் இயற்பிய லாளர், இரண்டு மீக்கடத்திகளுக்கு நடுவே நுண்ணிய இடைவெளி இருக்கும் ஒரு மின்சுற்றை உருவாக்கினார். இந்த அமைப் பானது 'ஜோசப்சன் சந்தி' (Josephson junction) என்று அழைக்கப்படுகிறது. ஜோசப்சன் சந்தியில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும், இரண்டு மீக்கடத்திகளுக்கும் இடையே ஓர் இடைவெளி உள்ளது. மரபு அறிவியல்படி, இரண்டு பொருட்களுக்கு இடையே இடைவெளி இருந்தால், மின்சாரம் பாயாதுதானே? ஆனால், விந்தையான குவாண்டம் உலகில், ஜோசப்சன் சந்தியில் குவாண்டம் ஊடுருவல் காரணமாக மின்சாரம் பாய்ந்தது. ஜோசப்சன் சந்தி மூலம், 'தனிப்பட்ட' கூப்பர் ஜோடிகளில் எப்படி குவாண்டம் வினைவு நடைபெறுகிறது என்பதை விளக்கியதற்காக, 1973ஆம் ஆண்டின் ஜோசப்சன் நோபல் பரிசினைப் பெற்றார்.
தனிப்பட்ட கூப்பர் ஜோடி மட்டுமல்ல, கோடிக் கணக்கான கூப்பர் ஜோடிகள் இணைந்து இருக்கும்போதும், குவாண்டம் ஊடுருவல் நடைபெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்னும் பெருமளவிலான குவாண்டம் ஊடுருவல் பற்றிய கருதுகோள்களை 1978ஆம் ஆண்டு ஆண்டனி லெகட் (Anthony Leggett) என்னும் இயற்பியலாளர் முன்வைத்தார். மீதிரவத்தன்மை (superfluidity) குறித்த கண்டுபிடிப்புக்காக 2003ஆம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசை அவர் பெற்றார். குறை வெப்பநிலை இயற்பியலின் (low-temperature physics) முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.
மூவரின் உழைப்பு
இந்த ஆண்டின் நோபல் கதைக்கு வருவோம், 1968ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரிய ராகப் பணியில் இணைந்தார் ஜான் கிளார்க். இவருடைய ஆய்வகத்தில், முதுமுனைவர் பட்ட ஆய்வுக்காக, 1980களின் மத்தியில் மிஷேல் டெவோரே இணைந்தார். அந்தக் காலத்தில், ஜான் மார்டினிஸ் அங்கே முனைவர் பட்டமாணவ ராக இருந்தார். மூவரும் இணைந்து, பெருமளவி லான குவாண்டம் ஊடுருவல் குறித்த ஆய்வினை முன்னெடுத்துக் கடினமாக உழைத்தனர்.
குவாண்டம் ஊடுருவல் பண்பைக் கண்டறிவதற்காக, ஜோசப்சன் சந்தியை இவர்கள் உருவாக்கினார்கள், இதில், குறைந்த அளவிலான மின்சாரத்தைப் பாய்ச்சி, எவ்வளவு மின்தடை உள்ளது என்பதைக் கண்டறிந் தார்கள்.
தொடக்கத்தில் எந்த மின்தடையும் இல்லை. ஆனால், சற்று நேரத்தில் குவாண்டம் ஊடுருவல் காரணமாக, கூப்பர் ஜோடிகள் ஒரு மீக்கடத்தியிலிருந்து மற்றொன்றுக்கு ஊடுருவிச் செல்வதைப் பதிவு செய்தனர். இதனால், லட்சக்கணக்கான எலெக்ட்ரான்கள் கொண்ட இரண்டு மீக்கடத்திகளுக்கு இடையே மின்சாரம் பாய்வதை அவர்கள் நேரடியாகக் காட்டினர். இதன்மூலம், 'பெருமளவிலான குவாண்டம் ஊடுருவலை முதன்முதலாக நிரூபித்தார்கள். இந்த ஆண்டின் நோபல் விருதாளர்கள். மேலும், கூட்டாக இயங்கும் கூப்பர் ஜோடிகளின் ஆற்றல் பண்பினையும் கண்டறிந்து விளக்கி யிருக்கிறார்கள்.
2025 - சர்வதேச குவாண்டம் ஆண்டு
குவாண்டம் துகள்களின் பண்புகளை விளக்கும் வகையில் எர்வின் ஷ்ரோடிங்கர் (Erwin Schrödinger) एक अ சமன்பாட்டை (wave equation) 1926இல் வெளியிட்டார். அதனால் எலெக்ட்ரான்களின் இயல்புகள், அணுக்களின் ஆற்றல் நிலைகள், கதிரியக்கச் சிதைவு போன்ற பல புதிர்களுக்கு விளக்கம் கிடைத்தது. இந்தக் கண்டுபிடிப் புக்காக ஷ்ரோடிங்கர் 1933இல் நோபல் பரிசு பெற்றார். குவாண்டம் கணினிகள், மின்னணு, ஒளியியல் கருவிகள், வானவியல் ஆய்வுகள் போன்ற துறைகளில் குவாண்டம் அறிவியல் இன்றளவும் புரட்சி செய்துவருகிறது. பயன்பட்டு வருகிறது. அதன் நூறாம் ஆண்டு நினைவாக, 2025ஐ ஐக்கிய நாடுகள் 'சர்வதேச குவாண்டம் அறிவியல் தொழில்நுட்ப ஆண்டு' என்று அறிவித்துள்ளது.
மங்கும் வரம்புகள்
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது, இந்த ஆண்டின் நோபல் விருதாளர்களில் ஒருவரான ஜான் கிளார்கிடம் ஒரு முக்கியமான கேள்வி கேட்கப்பட்டது "குவாண்டம் உலகும் மரபு உலகும் தனித்தனியானவையா? அவற்றை வேறுபடுத்தும் வரையறை என்ன?"
"எதுவரை குவாண்டம் விதிகள் பயன் + படுகின்றனவோ, அதுவரை குவாண்டம் உலகே" என்று வெகு இயல்பாக அவர் பதிலளித்தார்.
குழந்தைகளின் உலகுக்கும் பெரியவர் களின் உலகுக்கும் எப்படி ஒரே நேர்க்கோட்டு வரம்பை இட்டுக் காட்ட முடியாதோ, அதேபோல குவாண்டம் உலகுக்கும் மரபு உலகுக்கும் இடையில் வரம்புகள் தெளிவில்லாமல் மங்கத் தொடங்கியுள்ளன. குவாண்டம் உலகை அறிந்து கொள்வது, குழந்தை மொழியைப் புரிந்துகொள் வதைப் போன்றது. மழலை மொழியை உணர்ந்து கொண்டால், பெரியவர்களின் உலகிலும் அதன் மகிழ்ச்சி பரவும் தானே?. - The Hindh TamilThisai

No comments:
Post a Comment