ஓய்வூதியத்தை மீட்டெடுப்பதற்கான 18.11.2025 ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் - தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் அறிக்கை - TNTeachersTrends

Latest

Monday, November 17, 2025

ஓய்வூதியத்தை மீட்டெடுப்பதற்கான 18.11.2025 ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் - தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் அறிக்கை

One-day symbolic strike on 18.11.2025 to restore pension - Tamil Nadu Chief Secretariat Association statement - ஓய்வூதியத்தை மீட்டெடுப்பதற்கான 18.11.2025 ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் - தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம்

தலைமைச் செலயகப் பணியாளர்கள் முழுமையாகப் பங்கேற்போம்



12.11.2025 அன்று நடைபெற்ற சங்கத்தின் உணவு இடைவேளை-கவன ஈர்ப்பு கோரிக்கை முழுக்கக் கூட்டத்தில் பெருந்திரளாக பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, ஆட்சியாளர்களுக்கு 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது மற்றும் அரசுப் பணியிலுள்ள 4.5 இலட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பி சமூக நீதியினைக் காப்பது, மேலும் 17.05.2023 அன்று மாண்புமிகு முதலமைச்சரால் கொள்கை முடிவு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அகவிலைப்படியினை உடனடியாக வழங்குவது ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தினை அளிக்கும் விதமாக நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளோம் என்பதை அரசுக்கு சுட்டிக் காட்டியுள்ளோம்.

நம்முடைய போராட்டத்தின் காரணமாக மறுநாளே 13.11.2025 அன்று அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நமது போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி, தமது ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி, சங்கத்திற்குக் கிடைத்த வெற்றி. தோழர்களே, தொடர்ச்சியான போராட்டங்கள் உணவு இடைவேளை ஆர்பாட்டங்களால் 1.1.2023 முதல் அகவிலைப்படியினை ஒன்றிய அரசு அறிவித்த அதே தேதியில் நிலுவைத் தொகையுடன் பெற்று வருகிறோம்

24.01.2025 உலவு இடைவேளை கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தின் காரணமாக காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பினை மீட்டெடுத்தோம் 2017ல் ஜாக்டோ ஜியோவுடன் இணைந்து செப்டம்பர் மாதத்தில் நாம் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் தான் நமக்கு ஏழாவது ஊதிய மாற்றத்தினைப் பெற்றுத் தந்துள்ளது.

நமது தொடர் போராட்டங்கள் ஆளுகின்ற அரசால் நமக்கெதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியுள்ளது என்பதுதான் கள யதார்த்தம். தற்போது ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு, 4 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நிறைவேற்றாமல், குழு அமைத்தபோதும் அந்தக் குழு 30.09.2025க்குள் அறிக்கை அளிக்காமல் கால நீட்டிப்புக் கோரியுள்ளபோதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புப் பட்டை அணிந்தது தலைமைச் செயலக பணியாளர்கள் தான் என்பது, தலைமைச் செயலகப் பணியாளர்கள் தங்களது உரிமைகளை எள்ளளவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்துள்ளோம்.

இச்சூழ்நிலையில், மாண்புமிகு முதலமைச்சரின் அகவிலைப்படி தொடர்பான கொள்கை முடிவினை நடைமுறைப்படுத்துவதற்கே ஒரு போராட்டத்தை மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு தலைமைச் செயலகப் பணியாளர்கள் தள்ளப்பட்டோம். இந்தப் போராட்டத்தினால் அகவிலைப்படி உயர்வு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இது வாலாயமாக அறிவிக்கப்படக்கூடிய ஒன்று தான். உரிய நேரத்தில் வழங்காமல் கால தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் நமது போராட்டத்திற்குப் பிறகுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது இலக்கு என்பது ஓய்வூதியம் மட்டுமே. அகவிலைப்படி அறிவிப்பினால் ஓய்வூதியத்தினை பெறுவதில், நமது இயக்க நடவடிக்கையில், எதிர்வரும் 18.11.2025 செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திலிருந்து நாம் எள்ளளவும் பின்வாங்கப் போவதில்லை.

2017க்கு முன்பாக தமிழகத்தில் அரசு ஊழியர்கள்ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் குறித்த செய்திமினைத் தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். நமது உரிமைக்கான அந்தப் போராட்டங்களில் நாம் கலந்து கொண்டதில்லை.

ஆனால் இப்போது நிலைமை அவ்வாறில்லை. ஆளுகின்ற ஆட்சியாளர்களால் அரசு ஊழியர்களுக்கு எதிரான எந்தவொரு ஒரு பொதுவான கோரிக்கைக்கும் முதல் எதிர்ப்புக் குரல் என்பது தலைமைச் செயலகத்தில் இருந்துதான் பதிவாகிறது என்பதை நாம் செருக்கோடு எடுத்து இயம்பலாம். ஓய்வூதினை வழங்குவதில், மார்ச்சு முதல் வாரத்தில் தேர்தல் அறிவிக்கை வரவுள்ள நிலையிலும், இன்றும் ஏறத்தாழ 100 நாட்களே எஞ்சியுள்ள சூழ்நிலையிலும், ஆட்சியாளர்கள் எந்த அவசரத்தையும் காட்டுவதாகத் தெரியவில்லை.

மாண்புமிகு முதலமைச்சரால் 110 விதியின்கீழ் நிர்ணயம் செய்யப்பட்ட 30.09.2025 காலக்கெடுவினைக் கடத்து 48 நாட்கள் ஆன பிறகும், மெத்தனப் போக்குடன் செயல்படும் ஓய்வூதியக் குழுவிடமிருந்து அறிக்கையினைப் பெறுவதற்கு ஆட்சியாளர்கள் குறைந்தபட்ச முனைப்புக் கூட காட்டவில்லை.

ஓய்வூதியத்தினை இந்த நிதியாண்டிலேயே, அதாலது 2025-2026 நிதியாண்டிலேயே நடைமுறைப்படுத்தினால் மட்டும் தான், இந்த அரசின் மீதான நம்பகத்தன்மை-தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றுவது என்பது ஏற்படும். அப்படிப் பார்த்தால், வருகின்ற டிசம்பர் மாத இறுதிக்குள்ளாக ஓய்வூதிய தொடர்பான கொள்கை முடிவினை அறிவித்து, தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாக, இதுநாள் வரை பணியிலிருந்து ஓய்வுபெற்ற / இறந்த பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஓய்வூதியம் வழங்குவதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்திரவாதப்படுத்த வேண்டும்.

ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்காக எதிர்வரும் 18.11.2025 செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் தலைமைச் செயலகப் பணியாளர்கள் அனைவரும் பங்கேற்போம். ஓய்வூதியத்தினை மீட்டெடுப்போம்.

போராட்டங்கள் மட்டுமே உமது உரிமைகளை மீட்டெடுக்கும் என்ற வரலாற்றுப் படிப்பினையை மனதில் கொண்டு, நமது சுயமரியாதைக்கான வாழ்வுரிமையான ஓய்வூதியத்தினை மீட்டெடுக்க களம் காண்போம் தோழர்களே.

அனைவருக்கும் வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகள்.

No comments:

Post a Comment