அரசு ஊழியர் சம்பளத்துக்கு சிக்கல்? 'அரியர்' கணக்கீட்டில் குழப்பம் வந்தால் தொடர்பு கொள்ளலாம் - TNTeachersTrends

Latest

Tuesday, November 25, 2025

அரசு ஊழியர் சம்பளத்துக்கு சிக்கல்? 'அரியர்' கணக்கீட்டில் குழப்பம் வந்தால் தொடர்பு கொள்ளலாம்

அரசு ஊழியர் சம்பளத்துக்கு சிக்கல்?

'அரியர்' கணக்கீட்டில் குழப்பம் வந்தால் தொடர்பு கொள்ளலாம்

இதுகுறித்து விளக்கம் அளித்த அதிகாரிகள், 'அரியர் தொகை தானாக (ஆட்டோமேட்டிக்) கணக்கிடும் வகையில், 'சிஸ்டம் அப்டேட்' செய்யப்பட்டுள்ளது. பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது. இன்னும் சிக்கல் நீடித்தால், சம்பந்தப் பட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டால் வழிகாட்டப்படும்' என தெரிவித்தனர்.

சம்பள பில்லில் 3 சதவீத அகவிலைப்படி நிலுவையை கணக்கீடு செய்வதில் குளறுபடி ஏற் படுவதால், நவம்பர் மாத சம்பள பில் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, அரசு ஊழியர், ஆசிரியர் கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பள பில்லை ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேலாண்மை (ஐ.எப்.எச்.ஆர்.எம். .,) அமைப்பில் ஆன்லைனில் சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்த மாத சம்பள பில்லில் 3 சதவீத அகவி லைப்படி உயர்வுக்கான 4 மாத நிலுவைத் தொகை யையும் சேர்த்து கணக் கீடு செய்யப்படுகிறது. இதில், சில பிரச்னைகள் எழுந்துள்ளன.

அக்டோபரில் ஈட்டிய விடுப்பு சரண் செய்த வர்களுக்கான, அகவி லைப்படி நிலுவைத் தொகை,தேர்வு, சிறப்பு நிலை அலுவலர்களுக் கான அகவிலைப்படி நிலுவையை கணக் கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது போன்ற சிக்கல் ஏற்படும் போது இணை யதளத்தில் ஊழியர் களே திருத்தம் செய்யும் வாய்ப்பு தரப்பட்டிருந் தது. தற்போது ஆட்டோ மேட்டிக் வாய்ப்பு மட் டுமே உள்ளது. இதனால் நவம்பர் மாத சம்பள பில்லை அந்தந்த கருவூல கங்களில் சமர்ப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர், ஆசிரியர் கள் தெரிவிக்கின்றனர். கருவூலகத்துறை அதிகாரி கூறியதாவது:

இதற்கென தனியாக அலுவலர்களை நிய மித்து, பிரச்னைகளுக்கு தீர்வு பெற்று வருகிறோம். அதே நேரம் சம்பள பில் தயாரிக்கும் அலுவலர் கள், சம்பள பில்லில் ஏற்படும் பிழைகளை குறிப்பிட்டு, அந்தந்த சம் பளம் வழங்கும் கருவூல கத்தில் ஒப்படைத்தால் நிவர்த்தி செய்து தர உத்தர விட்டுள்ளோம்.

இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment